இயக்குனர் பன்னீர்செல்வம் தனது மகனை கதாநாயகனாக்கி இரண்டு படங்களை உருவாக்கி வருகிறாராம்.
ரேணிகுண்டா படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பன்னீர்செல்வம். அதன் பின்னர் அவர் கருப்பன் உள்ளிட்ட சில படங்களை இயக்கினாலும் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தனது மகனை கதாநாயகனாக வைத்து இரண்டு படங்களை தயாரித்து இயக்கியுள்ளாராம். லாக்டவுன் முடிந்து நிலைமை சீராகும்போது அந்த படங்கள் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.