விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து இரண்டாவது முறையாக நடிக்கும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா சமந்தா இருவரும் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்ய அவர்களுடன் விஜய் சேதுபதி பயத்தில் நடுங்கியபடி நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.