நடிகைகள் சஞ்சனா, ராகினி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி!

1599796705 ragini 02
1599796705 ragini 02

நடிகைகள் சஞ்சனா கல்ராணியும், ராகினி திவேதியும் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அந்த இரண்டு பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து காவல்துறையினர் கடந்த ஆண்டு அதிரடி சோதனை நடத்தினார்கள். நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். 10 மாதங்கள் கழித்து தற்போது அந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது சஞ்சனா கல்ராணியும், ராகினி திவேதியும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. சஞ்சனா, ராகினியின் ரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதனை செய்தபோது போதைப் பொருள் பயன்பாடு குறித்து தெளிவாக தெரியவில்லை.

இதையடுத்தே அவர்களின் (தலை முடி)பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் சஞ்சனாவும், ராகினியும் போதைப் பொருள் உட்கொண்டது தெரிய வந்திருக்கிறது.

போதைப்பொருள் வழக்கு விசாரணையில் முதல் முறையாக தலைமுடியை பரிசோதனை செய்திருக்கிறார்கள். போதைப் பொருள் உட்கொண்டால் சுமார் ஓராண்டு காலம் வரை அது முடியில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனை முடிவை அடுத்து சஞ்சனா, ராகினியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.