மானம் போய்விட்டது, கணவரை பிரியும் இஞ்சி இடுப்பழகி நடிகை?

samayam tamil 9
samayam tamil 9

ஆபாச பட வழக்கில் சிக்கி சிறையில் இருக்கிறார் ராஜ் குந்த்ரா. இந்நிலையில் அவரை விட்டு பிரிந்து புது வாழ்க்கையை துவங்க முடிவு செய்திருக்கிறாராம் ஷில்பா ஷெட்டி.

கணவர் சிறையில் இருக்கும் நிலையில் அவரை பிரிந்து புது வாழ்க்கையை துவங்க திட்டமிட்டுள்ளாராம் நடிகை ஷில்பா ஷெட்டி.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, விநியோகம் செய்த வழக்கில் யூலை மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆபாச பட விவகாரத்தில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்று காவல்துறையினர் தெரிவித்திருப்பதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலாக இருக்கிறது.

ராஜ் குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டாராம் ஷில்பா ஷெட்டி. குழந்தைகளுடன் அவர் வெளியே கிளம்பவிருக்கிறார் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராஜ் குந்த்ரா மற்றும் அவர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் புது வாழ்க்கையை துவங்க விரும்புகிறாராம் ஷில்பா ஷெட்டி.

ஷில்பா ஷெட்டிக்கு நெருக்கமான ஒருவர் கூறியிருப்பதாவது, ராஜ் குந்த்ராவின் பிரச்சனைகள் தீர்வதாக இல்லை. ராஜ் குந்த்ராவுக்கும், ஆபாச படங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்து மற்றவர்களை போன்றே ஷில்பாவும் அதிர்ச்சி அடைந்தார். ராஜ் வாங்கிக் கொடுத்த வீடு, வைரம் எல்லாம் இப்படிப்பட்ட வியாபாரத்தில் இருந்து வந்தது என்று ஷில்பாவுக்கு தெரியாது என்றார்.

ராஜ் தவறான வழியில் சம்பாதித்த பணத்தில் இருந்து தள்ளியிருக்கப் போகிறார் ஷில்பா. ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து ஷில்பா நன்றாக சம்பாதிக்கிறார். தான் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக திரைத்துறையில் உள்ளவர்களிடம் கூறியிருக்கிறார். ஷில்பா சவுகரியமாக வாழத் தேவையான பணம் இருக்கிறது. ராஜ் நெடுங்காலம் சிறையில் இருந்தாலும் ஷில்பாவுக்கு தன் வாழ்க்கையை கவனிக்க பிரச்சனை இல்லை என்று அவருக்கு நெருக்கமான நபர் தெரிவித்தார்.