ஜீ தமிழில் செம்பருத்தி என்ற தொடர்நாடகம் பெரியளவில் பிரபல்யமான தொடர்.
நாயகன்-நாயகி திருமணம் வைத்தே பல கட்டங்களை ஓட்டிவிட்டார் இயக்குனர். கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா ஜோடி இந்த தொடர் நாடகத்தின் மூலம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
இடையில் என்ன பிரச்சனை தெரியவிவ்லை ஆதியாக நடித்து வந்த கார்த்திக் ராஜ் செம்பருத்தி தொடர் நாடகத்தில் இருந்து வெளியேறினார், அதில் இருந்து செம்பருத்தி தொடர் நாடகம் கொஞ்சம் டல் அடிக்கத் தொடங்கியது என்றே கூறலாம்.
தற்போது செம்பருத்திதொடர் நாடகத்தின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது, இனி பழைய ஆதியை பார்க்கலாம்.
என்ன விடயம் என்றால் வரும் திங்கட்கிழமை முதல் (அக்டோபர் 4) செம்பருத்திசெம்பருத்தி தொடர் நாடகத்தின் முதற் கட்டத்திலிருந்து இருந்து மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறதாம். காலை 8 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.