அண்ணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ்!

samayam tamil 5
samayam tamil 5

தனது அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது அண்ணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். தற்போது இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தான் இவர்களுக்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. அவ்வபோது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள் இருவரும்.

இந்நிலையில் தன்னுடைய 35 வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார் கீதாஞ்சலி செல்வராகவன். இந்த கொண்டாட்டத்தில், நடிகர் தனுஷ், செல்வராகவன், நடிகை வித்யூலேகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கீதாஞ்சலி செல்வராகவன் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கீதாஞ்சலிகடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாறன்’ படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை தொடர்ந்து தனது அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.