நாக சைதன்யாவின் முதல் மனைவியை கூறிய சமந்தா!

samayam tamil 1 1
samayam tamil 1 1

என்னது நாக சைதன்யாவுக்கு, சமந்தா முதல் மனைவி இல்லையா என்று கேட்க வேண்டாம். அவரின் முதல் மனைவி யார் என்பதை உலகிற்கு சொன்னதே சமந்தா தான்.

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

கணவரை பிரிந்துவிட்டதை சமந்தா அக்டோபர் 2ம் தேதி உறுதி செய்தார். பிரிவது என்று முடிவு செய்ததுமே வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியிருக்கிறாராம் நாக சைதன்யா.

இந்நிலையில் நாக சைதன்யாவின் முதல் மனைவி பற்றி பேச்சு கிளம்பியிருக்கிறது. நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா தங்கள் படுக்கையறை ரகசியங்கள் பற்றி பேசினார்.

அப்பொழுது அவர் கூறியதாவது,

தலையணை தான் நாக சைதன்யாவின் முதல் மனைவி. நான் அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றாலும் எங்களுக்கு இடையே தலையணை இருக்கும் என்றார். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

இதற்கிடையே ஹைதராபாத்தில் இருக்கும் ரூ. 6 கோடி மதிப்புள்ள பங்களாவை சமந்தாவுக்கு கொடுத்துவிட்டார் நாக சைதன்யா என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது நாக சைதன்யாவும், சமந்தாவும் சேர்ந்து வாங்கி வசித்து வந்த பங்களா ஆகும்.