கொரோன நிவாரண நிதிக்காக 30 லட்சம் ரூபாய் வழங்கினார் நடிகை ஸ்ரீப்ரியா

i3 1
i3 1

கொரோன நிவாரண நிதிக்காக 30 லட்சம் ரூபாய் வழங்கினார் நடிகை ஸ்ரீப்ரியா. அதோடு கடைகள் மூடப்பட்டிருப்பதால் கிராமத்தில் உள்ள பெண்களின் மாதாந்திர பிரச்சினைகளை சமாளிக்க நாப்கின் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்ததுடன் ஸ்ரீப்ரியாவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஸ்ரீப்ரியா தமிழக அரசுக்கு மற்றுமொரு யோசனை கூறியிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: ஒட்டுமொத்த மக்கள் தொகையும் அடிக்கடி கைகளை சுத்தபடுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கைகழுவும் சோப்பும், சேனிடைசரும் கிடைப்பதில் நடைமுறையில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இப்பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறையே நிலவுகிறது.