செந்தில் பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்க முயற்சி

i3 5
i3 5

கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகர் நடிகைகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் தங்களின் பேஸ்புக், டுவிட்டர் இன்ஸ்ட்ராகிராம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காமெடி நடிகர் செந்தில் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. “நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யாவுடன் தானா சேர்ந்த ஊட்டம் படத்தில் நடித்தேன், அடுத்தும் நிறைய படங்களில் நடிக்கிறேன். உங்களுடன் தொடர்பில் இருக்க தற்போது நான் டுவிட்டர் கணக்கு தொடங்கி உள்ளேன். அனைவரின் ஆதரவுக்கு நன்றி. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து செந்தில் கூறியதாவது: எனக்கு செல்போனே அதிகம் பயன்படுத்த தெரியாது. போன் வந்தால் எடுத்து பேசுவேன். மற்றவர்களுக்கு போன் செய்வேன். இதை தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. டுவிட்டர் என்றால் என்ன? என் பெயரில் வேறு யாரோ எதற்கு கணக்கு தொடங்க வேண்டும்?. அதில் எனக்கு பணம் போடுவார்களா?. என்று கேட்டுள்ளார்.