‘ஆர்.ஆர்.ஆர்’ கொரோனாவால் தடைப்பட்டுள்ளது

i3 5 1
i3 5 1

பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் தயாராகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராம் சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்த நிலையில் கொரோனாவால் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஆலியா பட் நடிக்க வைப்பது ஏன் என ராஜமவுலி கூறுகையில், ராம் சரண், ஜுனியர் என்டிஆர்., என இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையே போட்டி போட்டு நடிக்க ஒரு நடிகை தேவைப்பட்டார்.

இது முக்கோண காதல் கதை இல்லை. அவரின் கதாபாத்திரம் மிகவும் அப்பாவித்தனமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும். இதற்கு ஆலியா தான் பொருந்துவர் என்பதால் அவரை தேர்ந்தெடுத்தேன் என கூறியுள்ளார்.