வருமானத்தை விட உயிர் முக்கியம் : சேரன்

i3 6
i3 6

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் இப்போது ஊரடங்கு முடியும் முன்பே பல மாநிலங்களில் துவக்கப்பட்டுள்ளது. சிலர் லட்சம் ரூபாய்க்கு கூட சரக்கு வாங்கி சென்றுள்ளார்கள்.

ஏதோ அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட்டம் நிற்பது போன்று ஆணும், சில ஊர்களில் பெண்களும் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். தமிழகத்திலும் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இயக்குனர் சேரன் டுவிட்டரில், ”நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா.. இதைவிட மதுவிலக்கு அமுல்படுத்த வேறு வாய்ப்பு கிடைக்காது. மீண்டும் உங்கள் ஆட்சி உருவாக்க இது ஒரு பெரும் ஆயுதமாக மாறியிருக்கும்.

அரசிற்கான வருமானம் என்பதைவிட பெரும்பாலான மக்களின் உயிர்காப்பதல்லவா முக்கியம். என முதல்வர் பழனிசாமிக்கு டேக் செய்துள்ளார்.