அரசுக்கு அறிவுரை செய்யும் கமல்ஹாசன்

i3 5 2
i3 5 2

ஒரு பக்கம் கட்சித் தலைவராக அடிக்கடி அரசுக்கு அறிவுரை செய்யும் கமல்ஹாசன் மறுபக்கம் சினிமா நடிகராகவும் சில விஷயங்களை இந்த கொரானோ காலத்தில் நடத்துவது ஆச்சரியமாக உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு விஜய் சேதுபதியுடன் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், அடுத்து ஜுன் 11ம் தேதி ஏ.ஆர்.ரகுமானுடன் ஒரு நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த கொரானோ காலத்தில் கமல்ஹாசன் எந்த களப்பணியிலும் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது ஏற்கெனவே எழுந்துள்ளது. ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்ற விமர்சனமும் அவர் மீதுண்டு. இப்படியான கொரானோ சூழலில் சினிமா பற்றிய விவாதம் தேவைதானா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்தப் பக்கம் அரசியல்வாதியாக கொரானோவுக்கு ஒரு அட்வைஸ். இந்தப் பக்கம் நடிகராக ஒரு விவாதம் ஏன் என்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்புதான் நாமே தீர்வு என்று சென்னையை மீட்டெடுக்கும் முயற்சி என ஒன்றை அறிவித்தார். அதுவும் சமூக வலைத்தள அறிவிப்பாகவே வந்தது.

ஏற்கனவே அமெரிக்காவில் கமல்ஹாசன் நடித்து வந்த சபாஷ் நாயுடு படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. தற்போது நடித்து இந்தியன் 2 படம் தொடர்ந்து சர்ச்சை இல்லாமல் நிம்மதியாக நடந்து முடியுமா என திரையுலகினர் எழுப்புகிறார்கள். இந்தசூழலில் எப்போதோ ஆரம்பிக்க போகும் தலைவன் இருக்கின்றான் படத்திற்கான புரொமோஷனை இப்போதே ஆரம்பித்துவிட்டார்.

அரசியல், சினிமா என இரண்டிலும் இப்படி மாறி மாறி பயணிப்பது அவரது எதிர்கால அரசியலைக் கேள்விக்குறியாக்கும் என்றே கருத்துகள் வெளிவருகின்றன. டிவியில் பிக் பாஸ் ஆரம்பித்தால் அதற்கு வேறு போக வேண்டும். ஒரே நேரத்தில் அரசியல், சினிமா, டிவி என மூன்று குதிரைகளை ஓட்ட ஆசைப்படுகிறார்.