நடிகர் சுஷாந்த் சிங் இறப்பில் மர்மம்!

Sushant Singh
Sushant Singh

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பிறகு இணையத்தளங்களில் பல விதமான தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது, பயங்கரமாக ட்ரெண்டாகி கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தங்கியிருந்த வீட்டின் காம்ப்ளைக்ஸ் சிசிடிவி காமெராவை ஆப் செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகி வருகிறது.

மேலும், அன்று இரவு சுஷாந்தின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து, மிகவும் சத்ததுடன் பாடல் வெளியே கேட்டு கொண்டாடியதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறியுள்ளார்கள். அவர் ரொம்ப சந்தோஷத்துடன் அன்று இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒரு ரிப்போர்டில் சுஷாந்தின் அவர்களின் பெட்ஷீட்டில் அவருடைய கைரேகை பதியவில்லையாம். இருந்தாலும் இடதுகை உடைய கட்டை விரல், மற்றும் சுண்டு விரல் மட்டும் ஒரு பெட்ஷீட்டில் பதிந்து இருந்ததாம்.

இந்த ஒரு விஷயம் தான் மிகவும் சந்தேகம் ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். ஏனென்றால் சுஷாந்த் இடது கை பழக்கம் உடையவர் கிடையாதாம். இதோடு சுஷாந்த் சிங்கின் வீட்டின் டூப்ளிகேட் சாவியும் தொலைந்துவிட்டதாக ஒரு தகவல் கிடைத்திருக்காம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அடுத்ததாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான ரியா தற்போது மகேஷ் பட்டுடன் தொடர்பில் இருக்கிறாராம்.

சுஷாந்த் சிங் இறந்த அப்போ, ரியா அவர்கள் ஆன்லைனில் தான் இருந்துள்ளாராம். அந்த நேரத்துல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பர்சனல் புகைப்படத்தை எல்லாம் நீக்கிவிட்டு, கமெண்ட்ஸ் பாக்ஸ் எல்லாம் ஆப் செய்துள்ளாராம்.

இந்த மாறி விஷயங்கள் எல்லாம் பரவிகொண்டிருப்பதால் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையா? தற்கொலையா? என ஒரு கேள்வி எழும்பிகொண்டிருக்கிறது.

இதற்கு எல்லாம் காவல்துறையின் விசாரணைக்கு பின் தான் என்ன உண்மை என அனைத்தும் தெரிய வரும் என்கிறார்கள்..