கவியரசர் வைரமுத்து குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கவிஞர் வைரமுத்து அவர்கள் டுவிட்டை பதிவு செய்துள்ளார்.
அதில் என்னைப்பற்றிய வீண் வினா எழுப்புவது தேவையில்லாத வேலை என்றும், போய் வேலையைப் பாருங்கள் என்றும் மனிதவளத்தையும், மனவளத்தையும் மாண்புறுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் உயிரும் பொருளும் மானமும் அறிவும் இன்னற்படும் இந்த எரிபொழுதில் நான் கவிஞனா பாடலாசிரியனா, நாவலாசிரியனா, நாவலனா என்று சிலர்வினாவெழுப்புவது வீண்.
நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை.நான் வெறும் மொழியாளன். வேலையைப் பாருங்கள். மனிதவளத்தை மனவளத்தை மாண்புறுத்துங்கள்.