கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிக பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதற்காக பல நாடுகளும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகிறது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் கோரத்தாண்டவம் அடிவருகிறது, நோய் தோற்றும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் உள்ளது.
இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் தான் அக்ஷராஹாசன், இவரின் மேக்கப் கலைஞரான சச்சின் டாடா என்பர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இதனால் மிகுந்த சோகத்திற்க்கு உள்ளான நடிகை அக்ஷராஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சச்சின் டாடா, ஷமிதாப் திரைப்படத்திலிருந்து எனது மேக்கப் கலைஞ்சராக இருந்து வருகிறார்.
அவர் மிகவும் சந்தோஷமான, திறமையான மனிதர். அவர் எனக்கு சிறந்த நண்பர், அவரின் இரண்டு மகன்களுக்கு சிறந்த அப்பா, அவரின் மனைவிக்கு சிறந்த கணவராகவும் இருந்துள்ளார்.
அவர் எங்கிருந்தாலும் நிம்மதியாக இருக்கட்டும் என சோகத்துடன் பதிவிட்டுள்ளார் அக்ஷராஹாசன்.