ராஜா ராணி என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி சென்பாவாக நடித்திருந்த ஆல்யா மானசாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்த சீரியல் மூலமே தனது வாழ்க்கை துணையாக தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை தெரிவு செய்த ஆல்யா, தனது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்துள்ளனர். ஆல்யா இப்போது ராஜா ராணி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது படப்பிடிப்பின் இடைவேளையில் ஆல்யா குழந்தையுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.
அவரும் அவரது குழந்தையும் ஒரே நிற ஆடை அணிந்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அந்த புகைப்படம தற்போது வைரலாகி வருகிறது.