குறும்படம் போடுங்க: இரண்டாவது நாளே போர்க்கொடி தூக்கும் அனிதா!

biggboss 4 anitha6102020m


நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் மீண்டும் ஷிவானி கார்னர் செய்யப்பட்டதையும், இரண்டாவது புரமோவில் அனிதா சம்பத்தின் உருக்கமான காட்சிகளும் இருந்தன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள அடுத்த புரமோவில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டை போட்டு நிற்கும் காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது

biggboss 4 anitha6102020m4
biggboss 4 anitha6102020m4

அனித்தா சுரேசைப் பற்றி செய்தி வாசிக்கிறார் பிக்பாஸ் தழிழ் சீசன்4 நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது அந்த டாஸ்க்கில் காட் பிறேக் என்றால் என்ன என்று தெரியாதது போல் நடித்த சுரேஸ் கையும் களவுமாக பிக்பாசிடம் மாட்டிக் கொண்டார் பிறகு என்ன செய்வது என்று தெரியாது திரு திரு என முழித்த திரு சுரேஸ் அவா்கள் பிக்போசிடம் தன் தவறை ஒப்புக் கொண்டார்

biggboss 4 anitha6102020m1

இவ்வாறு அனித்தா கூறும் போதுதான் சிலர் வணக்கம் சொல்லும்போது முகத்தில் எச்சி தெறிக்கும் என்நு சுரேஸ் சொன்ன வார்த்தை இருவருக்குமிடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

சுரேஷ் சக்கரவர்த்தி என்னிடம் பேசும்போது செய்தி வாசிப்பவர்களிடம் நான் பேச மாட்டேன் ஏனென்றால் அவர்களுடன் பேசும்போது எச்சில் தெறிக்கும்’ என்று கூறியதாக அனிதா சம்பத் குற்றம் சாட்டினார். ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை என்று சுரேஷ் சக்கரவர்த்தி மறுக்கின்றார்.

biggboss 4 anitha6102020m3
biggboss 4 anitha6102020m3

இவ்வாறு எச்சில் தெறிக்கும் என்று கூறுவது மூன்றாம் தரமாக உள்ளது என மீண்டும் அனிதா கூறியதோடு,வேண்டுமென்றால் குறும்படம் போட்டுப் பார்ப்போம் என்று கூற அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி ’குறும்படம் என்ன பெரும்படமே போட்டு பாருங்கள்’ என்று கூறுகிறார்

இந்த சண்டையை விலக்கி வைக்க ரேகா உள்பட மற்ற போட்டியாளர்கள் முயற்சிக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதாவது தான் குறும்படம் என்பது போடப்படும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் இரண்டாவது நாளே குறும்படம் போடுங்க என்று அனிதா சம்பத் போர்க்கொடி தூக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க இந்த சீசனில் முதலிலேயே சண்டையை ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது