சிறையில் பிறந்தநாள் கொண்டாட அனுமதி கோரிய நடிகை சஞ்சனா!

கன்னட திரையுலகில் நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி (வயது 30). இந்த நிலையில் போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சஞ்சனா கல்ராணிக்கு ஓக்டோபர் 10-ந் திகதி பிறந்தநாள். அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக நண்பர்களுடன் விருந்துடன் கொண்டாடி வந்துள்ளார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனா கல்ராணி தனது பிறந்தநாளை சிறையில் வைத்தே கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்து உள்ளார்.

இதற்காக அவர் சிறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கும் பட்சத்தில், சஞ்சனா தனது பிறந்தநாளை சிறையில் கேக் வெட்டி கொண்டாட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.