ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச்சென்ற குஷ்பு கைது!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.