தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் நிறைய பேர் வரலாம். ஆனால் ஒரு சிலரது இடத்தை யாராலும் எப்போதும் பிடிக்க முடியாது. அப்படிபட்டநகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக். காமெடி அதையும் கருத்தோடு மக்களுக்கு கொடுத்து அவர்களை சிந்திக்க வைப்பார்.
இப்போதும் அந்த வேலையை தொடர்ந்து படங்களில் செய்து வருகிறார். அதேசமயம் அப்துல் கலாம் அவர்களின் ஆசையையும் நிறைவேற்றி வருகிறார், அதாவது செடிகள் நடுவது தான்.
இந்த நிலையில் நடிகர் விவேக் தாடி, தலைமுடி எல்லாம் நரைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இப்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.