இந்திய கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் போட்டிகளில், கொல்கத்தா அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி, அண்மையில் நடைபெற்ற போட்டியொன்றில், 20 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான வருண் சக்கரவர்த்தி, “தலைவா” படத்திலுள்ள விஜய்யின் தோற்றத்தை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். இந்நிலையில், வருணின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், நடிகர் விஜய்யை அவர் சக்கரவர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
இச் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை, வருண் சக்கரவர்த்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், பகிர்ந்துள்ளார்