பிக் பொஸ் சீசன் 4 ஆரம்பித்தில் இருந்தே பாலாவிற்கும், நடிகர் ஆரிக்கும் பல கருத்து வேறுபாடுகளும், பல சண்டைகளும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒளிபரப்பான எபிசோடில் எங்கேயோ துவங்கி, பல சலசலபில் சிக்கி பாலாவும், ஆரியும் தவறான முறையில் மோதிக்கொண்டனர்.
இதில் ஆரியை பார்த்து, சோத்துல உப்பு போட்டு தான் தின்றியா என்று பாலா கேட்க, அதற்கு பதில் கொடுத்த ஆரி நீ ஆம்பளையா இருந்தா என்னவேணுமாலும் பண்றா பாக்கலாம் என்று கூற தவறான முறையில் பிக் பொஸின் எபிசோட் சென்றது.
இதன்பின் தனது தவறை உணரிய பாலா, ஆரியிடம் மன்னிப்பு கேட்டு, அவரது காலில் விழுந்தார். மேலும் பாலாவிடம் ஆரி மன்னிப்பு கேட்டார்.