ஒவ்வொரு படத்திலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் முன்னணி தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் சமந்தா.
இவர் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும், திரில்லர் கதைக்களம் கொண்ட படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட, மாலத்தீவிற்கு சென்றிருந்தார் நடிகை சமந்தா. அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா அளித்த பேட்டியில் மாலத்தீவில் நான் பிகினி அணிந்து புகைப்படம் எடுக்கவில்லை. பிகினி அணிந்ததாக கூறுவது பொய். சினிமாவில் கூட நான் நடிகர்களுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சிகளில் நடித்ததில்லை என கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.