மஹர சிறை மோதல் சம்பவத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைதி நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைத் தேடி விசேட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் சற்று முன்னர் குறித்த கைதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கொடவத்தை பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.