அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் பாதிப்பு உண்டா?

ht44516850
ht44516850

பொதுவாக உடற்பயிற்சி செய்வது நம் ஒட்டுமொத்த உடலுக்குமே நன்மை அளிக்கக் கூடியது.

ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சியை செய்வது உடலுக்கு பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் கீழ்க்கண்ட பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • உடலில் இருக்கும் ஆற்றல் முழுவதையும் உடற்பயிற்சிக்கு என்றே பயன்படுத்தி விட்டால் மற்ற நேரங்களில் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். இரவில் 7-8 மணி நேரம் தூக்கம், காலையில் நல்ல சாப்பாடு போன்றவற்றை எடுத்தால் கூட இந்த சோர்வு உங்களை விடாது.
  • உடற்பயிற்சியை கடினமாக செய்யும் போது உங்கள் தசைகள் பதட்டமாகின்றன. இது படிப்படியாக களத்தில் உங்கள் செயல்திறன் அளவைக் குறைக்கிறது. இது உங்களை விரக்தியடையச் செய்கிறது. எனவே பயிற்சி அமர்வுகளுக்கு இடையில் நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டும்.
  • தீவிரமான உடற்பயிற்சி பழக்கம் இல்லாதது திடீரென அதை மேற்கொள்ளும் போது காயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தசை வலி, மூட்டு திரிபு, முதுகுவலி ஆகியவை சில பொதுவான உடற்பயிற்சிக் காயங்கள் ஆகும்.
  • ஜிம்மில் அதிகமாக உடற்பயிற்சி செய்வதனால் இரும்புச் சத்தை அதாவது ஆற்றலை இழப்பதால் இரவில் தூக்கம் வராமல் தவிக்க நேரிடலாம். உங்கள் தசைகள் அழுத்தமாக இருக்கும், நீங்கள் அமைதியற்றவராக உணரலாம் மற்றும் தூங்குவது கடினமாக இருக்க வாய்ப்புள்ளது .
  • அதிகப்படியான பயிற்சி என்பது நேர்மாறாக இருக்கிறது. இது உடலில் கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது, இது கடுமையான மனநிலை மாற்றங்கள், நாட்பட்ட மன அழுத்தம், கவலைக் கோளாறுகள் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும்.