பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

download 2 8
download 2 8

பூசணிக்காய் கொடி இனத்தைச் சேர்ந்தவை. இவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலங்களில் அல்சர், நீரிழிவு நோய், கீல் வாதம், உடல் பருமன், சிறுநீர் பாதை நோய் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது.

விளையுமிடம்:
சமவெளி மற்றும் மலையடிவாரங்களில் வளர்கின்றன. தெற்கு ஆசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு குளிரில்லாத, ஓரளவு வெப்பமான பருவ நிலை மிகவும் உகந்தது.

இந்தியாவில் அதிகமாக பஞ்சாப் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் பயிரடப்படுகிறது. இதன் விதைகள் பிப்ரவரி மாதத்தில் பயிரிடப்படுகிறது. விதைத்த 90 -ம் நாளிலிருந்து காய்களை அறுவடை செய்யலாம்.

புறஅமைப்பு:
இவை வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் காணப்படும். இவை முதிர்ச்சி அடையாத நிலையில் மெல்லிய ரோமம் போன்று சூழப்பட்டிருக்கும். பழுக்கும் போது இவை மறைந்து விடும். முதிர்ந்த வெண்பூசணியின் மீது வெள்ளை சாம்பல் நிறம் சூழப்பட்டிருக்கும். இதனால் ஆங்கிலத்தில் இதற்கு ஆஷ் கார்டு என்று பெயர்.

இதில் விற்றமின் சி உள்ளது. இவை சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பதால் இவை மாசுபடுத்திகள், நச்சுக் கூறுகள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது. இவை இதய நோய், புற்றுநோய், கீழ்வாதம், ஆகியவை உருவாவதை தடுக்கிறது.

வெண்பூசணியில் நார்சத்து உள்ளதால் அவை செரிமான மண்டலத்தின் செயலைமேம்படுத்துகிறது. நார்ச்சத்துகள் செரிக்காத உணவு ஆகும்.இவை மலத்தை மிருதுவாக்கி மலக்குடல் வழியாக எளிதில் வெளியேறும் படி செய்கிறது. இதனால் மலச்சிக்கல், மூல நோய், கோலன் கேன்சர் வராமல் தடுக்கின்றன. அது மட்டுமல்லாமல் உடல் எடை இழப்பிற்கும் உதவுகிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவற்றில் ரிபோபிளேவின் (விற்றமின்- பி2) உள்ளதால் கண்புரை நோய் வராமல் தடுக்கிறது.

விற்றமின் – சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல், சளி மற்றும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து தடுக்கிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற பயன்படுகிறது. பூசணிக்காயில் அதிக அளவு நீர் சத்து நிறைந்திருப்பதால் இவை சிறு நீரைப் பிரிக்கும் பண்பை பெற்றுள்ளன. சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.
விற்றமின் பி2 ஒற்றைத் தலைவலியின் கால அளவை குறைக்கிறது. ஒற்றைத் தலைவலி வராமலும் தடுக்கின்றது.

விற்றமின் பி2 நரம்பு, மூளை மற்றும் ஹார்மோன்கள் ஆகியவற்றின் சரியான செயல்பாட்டிற்கும் பழுது மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையானவை. இவை ஊட்டச்சத்துகளை ஆற்றலாக மாற்றி உடலிற்கு தேவையான சக்தியை அளிப்பதோடு ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை வழங்குகிறது.

ஆராய்ச்சிகளின் முடிவுகளில் போதிய அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்பவருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 42% குறைவு என்று கூறுகிறது. பூசணிக்காயில் விற்றமின் சி உள்ளதால் இவை பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

இவற்றில் உள்ள குக்கூர்பிடின் ஆன்டி அழற்சி தன்மை கொண்டவை. இவை ஹிஸ்டமைன் உற்பத்தியாவதை தடுக்கிறது.
சாம்பல் பூசணி குளிர்ச்சி தன்மை உடையதால் இவை உடலின் வறட்சியை நீக்கி, வெப்பநிலையை குறைக்கிறது.