முகத்தின் அழகை மேம்படுத்தும் ஏராளமான குணங்கள் அடங்கியுள்ள சாமந்திப்பூ !

1632909048 9814
1632909048 9814

சாமந்திப்பூவில் அழகை மேம்படுத்தும் ஏராளமான குணங்கள் அடங்கியுள்ளன. சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.

அதில் சாமந்திப் பூக்களைப் போட்டு, அடுப்பை அணைத்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்து விடவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும். இந்தத் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு குளிரூட்டியில் வைத்து உபயோகிக்கலாம்.

சாமந்திப் பூ – 20 எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 5 முறை தண்ணீரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர், தண்ணீரை வடித்துவிட்டு பூக்களை மட்டும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை, சீயாக்காயுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலை அரிப்பு, பொடுகு, முடி கொட்டுவது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

3 கப் தண்ணீரில் 5 சாமந்திப் பூவைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அரை கப் அளவிற்கு தண்ணீரை வற்ற விட வேண்டும். தண்ணீர் அரை கப் அளவிற்கு வந்தவுடன் அதனை ஆற வைத்து குழாய்களில் நிரப்பி, குளிரூட்டியில் வைக்க வேண்டும். பின்னர், அந்த குழாய்ககளை எடுத்து ஒரு துணியில் சுற்றி, முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இப்படி செய்தால் சோர்வடைந்த வாடிய சருமம் பளிச்சென்று மின்னும். மேலும், இழந்த இளமையைத் திருப்பித் தரும்.

சாமந்திப்பூ கலந்த டீயை குளிர வைத்து, அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு அடியில் உள்ள கருமை நீங்கும். கண்களின் வீக்கம் குறையும்.

இதை நீர்க்கச் செய்து, பஞ்சில் தொட்டு முகம் முழுக்கத் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் வெயில்பட்டுக் கருத்துப் போன சருமம் நிறம் மாறும்.