இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 43ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக எவின் லூயிஸ் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் ஹர்ஷல் படெல் 34 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.