விசாரணை இடம் பெறுகின்றது; ஊடகங்கள் அமைதி காக்கவும்!

images 21
images 21
  • 06 பக்கங்களில் முறைப்பாடு வழங்கியதாக
    மஹிந்தானந்த அறிவிப்பு

“(2011)ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பாக தான் கூறிய கருத்து தொடர்பில், (06) பக்கங்களைக் கொண்ட முறைப்பாடொன்றை இன்று பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினருக்கு நான் வழங்கியுள்ளேன்.”

  • இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

(2011)ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியானது, பணத்துக்கா தாரைவார்க்கப்பட்டது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழுப்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

சர்ச்சைக்குரிய இக்கருத்து தொடர்பில், இன்று (24) காலை (6.30) மணிக்கு நாவலப்பிட்டியிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, மஹிந்தானந்த அளுத்கமகேயிடம், விளையாட்டுத் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் விசேட பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை, விளையாட்டுத் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் விசேட பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, தனக்கு குறித்த போட்டி தொடர்பில் சந்தேகம் இருக்கின்றது எனவும், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதால் ஊடகங்களை அமைதியாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.