கோலி, டிவில்லியர்சில் மாத்திரம் தங்கியிருக்க கூடாது

moeen ali
moeen ali

ஐபிஎல் தொடரில் விளையாடும் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 12 வீரர்களை அதிரடியாக வெளியேற்றியுள்ளது.

விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகிய இருவர்கள்தான் ஆர்சிபி அணியின் துடுப்பாட்ட முதுகெலும்பாக உள்ளனர். மூன்று முறை ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு நுழைந்த போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொயீன் அலி,

பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது தெரிவித்துள்ளார்.

எங்கள் அணியின் வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து இருக்காது துடுப்பாட்டத்தில் என்னைப் போன்ற வீரர்கள், சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.