ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆர்வலர்கள் பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அங்கிருந்து வெளியேற முற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தை பொலிசார் சுற்றிவலைத்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறும் அவ்வாறு வெளியேறா விட்டால் 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை தவிர போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்வோம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற முற்பட்ட 100 பேரை பொலிசார் கைது செய்தனர்.
பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் சுமார் 200 போராட்டக்காரர்கள் தொடர்ந்து போலீசாருடன் மோதி வருகின்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் பல்கலைக்கழகத்தின் பின்புறம் வழியாக கயிறு கட்டி இறங்கியும், கழிவு நீர் சுரங்கப்பாதை வழியாகவும் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகம் தொடர்ந்தும் வன்முறை களமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.