மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குச் சென்ற சாக்ஷி, அபி, மோகன்!

hqdefault
hqdefault

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி, மோகன் வைத்யா மற்றும் அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர். ஏற்கனவே கவின், வனிதா சண்டையால் பிக்பாஸ் வீடு ரணகளமாக இருக்கிற சூழ்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியேறிய சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் கவின் – லாஸ்லியா காதல் மட்டுமே பல பிரச்சினைகளோடு பேசு பொருளாக உள்ள இந்நிலையில், கவினுடன் முன்பு காதலில் இருந்த முன்னாள் போட்டியாளரான சாக்ஷி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தான், கவின் மற்றும் லாஸ்லியாவால் தனது பெயர் எந்தளவிற்கு கெட்டுப் போய் இருக்கிறது என்பதை சாக்ஷி தெரிந்து கொண்டார். இதனால் அவர்கள் இருவர் மீதும், அவர் கடும் கோபத்தில் இருக்கிறார்.

ஏற்கனவே, கவினைத் திட்டி அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். பின்னர் அதனை அவர் நீக்கி விட்டார். இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் கவினை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. எனவே, நிச்சயம் தனது கோபத்தை வெளிப்படுத்தி, கவினை பழி தீர்த்துக் கொள்வார் சாக்ஷி என எதிர்பார்க்கப்படுகிறது.

பாவம் கவின், ஏற்கனவே வனிதாவால் பல பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். இதில் புதிய வரவாக சாக்ஷியும் சென்றிருப்பதால் இனி அவர் பாடு திண்டாட்டம் தான்.