எதிர்காலத்தில் எச்சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாடல் நடத்த ஶ்ரீலங்கா சுதந்தரி கட்சி தயார் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறு கட்சிகள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மற்றுமொரு குழுவினர் வேறு ஒரு வேட்பாளரை நிறுத்துமாறும் மற்றுமொரு குழுவினர் ஐக்கிய தேசிய கட்சியின் உதவியுடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டும் என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவை தவிர்ந்து வேறு யாருடனும் கலந்துரையாடுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.