இந்திய அளவில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் விற்பனை வீதத்தில் வீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் பெரிய அளவில் புதிய தொழில்நுட்பங்கள் எவையும் உட்புகுத்தப்படுவதில்லை.
ஏற்கணவே உள்ள அம்சங்களிலேயே சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.
இதனால் மக்கள் தாம் தற்போது வைத்திருக்கும் கைப்பேசிகளையே நீண்ட காலத்திற்கு பயன்படுத்த விரும்புகின்றனர்.
அதாவது தற்போது சராசரியாக 3 மாதங்களுக்கு ஒருமுறை புதிய கைப்பேசிகள் மாற்றப்படுகின்றன.
ஆனால் இனி இது 14 தொடக்கம் 15 மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இருக்கும்.
எனவே 2020 ஆண்டிற்கான 20 சதவீதமான கைப்பேசி விற்பனையானது 2021 ஆம் ஆண்டிலேயே இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இவ்வாறான காரணங்களினாலேயே கைப்பேசி விற்பனை வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.