பாதுகாப்பை இழந்த லிட்டில் மாஸ்டர்

images 11 1
images 11 1

இந்திய துடுப்பட்ட வீரர் சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே ஆட்சியமைத்ததை அடுத்து, சமீபத்தில் அரசாங்கக் குழு ஒரு கூட்டத்தை கூட்டியது. அதில், சச்சின் மற்றும் ஆதித்யா தாக்கரே தவிர, 90 க்கும் மேற்பட்ட முக்கிய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், பாரத ரத்னா விருது பெற்ற சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒய் பாதுகாப்பில் இருந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்ய தாக்கரேவுக்கு (29) ‘இசட்’ பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.