இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்கவிற்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று முன்தினம்அலரி மாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு, புலனாய்வு குறித்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேசப்பட்டதாகவும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயிற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நான்கு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய கடற்படைத் தளபதி நேற்று முன்தினம் புதுடெல்லி திரும்பினார்.
அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
திருகோணமலைக்கும் பயணம் மேற்கொண்டிருந்த அவர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.