ஜமாத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த பதினொருபேர் பயங்கரவாத தடுப்பு விசாரணைகள் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றாகிய ஜமாத்தே மில்லாது இப்ராஹிம் என்ற அமைப்பு தடை செய்யப்பட்டது.
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட பதினொருவரே பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பதினொருவரும் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.