5 முதல் 10 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பிரமாண்டமான விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்துபோக வழிவகுத்து தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வகையான விண்கல், ஒவ்வொரு 50 முதல் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நமது கிரகத்தை தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நாசா விண்வெளி தரவுகளை மேற்கொள் காட்டி உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த விண்கல்லானது சிறிய நகரங்களேயோ அல்லது முழு நகரங்களையோ அழிக்க கூடிய வல்லமை பெற்றிருந்தாலும், நமது கிரகத்தில் மோதுவதற்கான வாய்ப்பு ஒரு சதவீதமே உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.