ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு சொந்தமான சுற்றுலா விடுதியொன்றில் இன்று (28) அதிகாலை தீ பரவியுள்ளது.
தீயணைப்புப்பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த விடுதிக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.