புதிய ஊதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி வங்கிகள் வேலை நிறுத்தத்திற்கு அறிவிப்பு

bank strike
bank strike

விலைவாசியை கருத்தில்கொண்டு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதன்படி ஜனவரி 31ம் திகதி, பிப்ரவரி 1ம் திகதி, மார்ச் 11ம் திகதி முதல் 13ம் திகதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது.

இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர்.

நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி வருகிற 31ம் திகதி மற்றும் பிப்ரவரி 1ம் திகதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை, தனியார்துறை, அயல்நாட்டு வங்கிகள் என எல்லா வங்கிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.