மாதுளை பழத்தை போன்று புத்தணர்வு அளிக்கும் பழம் வேறொன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதில் நிறைய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றது.
உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் மாதுளை பழங்களில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மாதுளையின் பழம், பட்டை, பூ முதலானவைகளும் உடலுக்கு நன்மை தரும். புளிப்பு மாதுளையை தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு உடனடியாக குறையும்.
ரத்த போக்கினை சீராக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. சிறுநீரை சீராக வெளியேற்றும் தன்மை இந்த பழத்திற்கு மிக அதிகம். இதயத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்க கூடியது.
இனிப்பு மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வர பித்தத்தை போக்கும். வரட்டு இருமலை அடியோடு நிறுத்தும் ஆற்றலை மாதுளை பெற்றிருக்கிறது.
உடல் எடை கூடுவதற்கு மாதுளை அருமருந்தாகும். ஏனெனில் இதில் உள்ள மருத்துவ பொருட்கள் பசியினை தூண்டும் ஆற்றல் கொண்டது. வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும் மாதுளை பயன்படுகின்றது.