சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடும் மக்கள்

5 mm
5 mm

வெவ்வேறு நாடுகளில் உள்ள சீனர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள சீனப்பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது நேற்று -27- கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் கொரோ வைரஸ் தொடர்பான பீதி இலங்கை மக்களையும் ஆட்கொண்டு விட்டது.


இதனால் இலங்கை வந்திருக்கும் சீனப்பிரஜைகள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.


அவர்களைக் கண்டால் மக்கள் பயத்தில் உள்ளார்கள். அத்துடன் சாரதிகளும் அவர்களை வாடகை வாகனங்களில் ஏற்றுவதை தவிர்த்து வருகின்றார்கள்.


அத்துடன் அவர்களுக்கு அருகில் செல்லவும் தயங்குவதை வீதியில் காணக்கூடியதாக உள்ளது.