கல்முனை மாநகர கிராமங்களில் சப்ரிகம வேலைத்திட்டம் ஆரம்பம்

maxresdefault 1 1
maxresdefault 1 1

நாட்டில் நிலவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சப்ரிகம வேலைத் திட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பிரதேச செயலாளர் MM.நஸீரின் வழிகாட்டலில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மருதமுனை, பெரியநீலாவணை மக்களின் உட்கட்டமைப்பு தேவைகளில் ஒன்றாக இருந்து வந்த பெரியநீலாவணை ஷரிபுத்தீன் வித்தியாலய வீதியின் எட்டாம் குறுக்கு வீதிக்கு கொங்கிறீட் இடும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெரியநீலாவணை,முதலாம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் N.M.U.சத்தார் தலைமையில் முன்னெடுக்கப்படும் இப்பணிக்கு 08 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதனால் இப்பாதையில் ஊடாக அதிகமான மக்கள் பயனடையவுள்ளார்கள்.