நாட்டில் கொரோனா தொற்றினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வழங்கப்பட்ட (5,000) ரூபா கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான கணக்காய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C. விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
(5,000) ரூபா கொடுப்பனவு உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கீழ் பிராந்திய மட்டத்தில் கணக்காய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
(5,000) ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஊடகங்களின் வாயிலாக அறிக்கையிடப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டே ஆராயப்படவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா பரவலினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் சமுர்த்தி பெறுவோர், முதியோர், விசேட தேவையுடையோர் மற்றும் விவசாய ஓய்வூதிய பெறுநர்கள் உள்ளிட்ட பலருக்கும் அரசாங்கத்தினால் (5,000) ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.