அரச ஊழியரை சுட்ட கிளிநொச்சி பொலிஸ்

90m
90m

கிளிநொச்சி பகுதியில் மதுவரித் திணைக்களத்தின் வாகனத்தை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வாகனத்தில் பயணித்த தகவலாளர் காயமடைந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரு ம் மதுவரித் திணைக்களத்தினரம் ஒரேநேரத்தில் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸாரின் வாகனத்திற்கு முன்பாக, மதுவரித் திணைக்களத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட  வாகனம் தேடுதல் நடவடிக்கைக்காக  வேகமாக பயணித்துள்ளது.

குறித்த வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எண்ணிய பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த 38 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவர் காயமடைந்துள்ளார்.

அவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் அறிவித்துள்ளார் .