பொதுவாக இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினர் விரைவில் முதுமையானவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர்.
இப்படி காட்சியளிப்பதற்கு சரும பராமரிப்புகளும், உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.
இதனை மறைக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்கள், மருந்துகள் போன்றவற்றை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஆனால் இது சில சமயங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.
இதற்கு இயற்கைமுறையில் கிடைக்கும் சிறு சிறு பொருட்களை கொண்டு எளிய முறையில் இளமையை திரும்ப பெற முடியும்.
அந்தவகையில் தற்போது இளமையான தோற்றத்தை பெற என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.
மாதுளை, எலுமிச்சை, ஆரஞ்சு, வாழைப்பழம் பொடி கலவைகளை தனித்தனியாகவோ பயன்படுத்தலாம்.
வாழைப்பழத்தை மட்டும் அப்படியே மசித்து பயன்படுத்தலாம். பழங்களின் தோலை பயன்படுத்தும் போது சிட்டிகை மஞ்சள் தூளையும், ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தலாம்.
இதனால் முகத்தில் பொலிவு கூடுவதோடு சருமத்தில் சுருக்கங்கள் விழுவதும் தள்ளி போகும்.
கற்றாழையின் உள்ளிருக்கும் மஞ்சள் நிற திரவத்தை வெளியேற்றி, அதில் இருக்கும் நுங்கு போன்ற பகுதியுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு இரண்டையும் நன்றாக் சேர்த்து மசித்து கலக்க வேண்டும்.
பிறகு இதை முகத்திலும், கழுத்திலும் தடவி காயவிடவும். 15 நிமிடங்களில் கற்றாழை உலர்ந்துவிடும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி துடைக்கவும். (வறட்சியான முகம் கொண்டவர்கள் பன்னீர் அல்லது பால் பயன்படுத்தலாம்.)
தினமும் ஒரு முறை செய்யலாம். குறிப்பாக சருமத்தில் சுருக்கங்கள் விழும் போதே இதை செய்து வந்தால் எளிதாக அதை போக்கிகொள்ளலாம்.