இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 55 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 54 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேபோல், நேற்றைய நாளில் மாத்திரம் கொரோனா தொற்றால் 779 பேர் உயிரிழந்தள்ள நிலையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.