சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பெண்!

202008131650028355 Corona vulnerability confirmed to Russian Deputy PM SECVPF
202008131650028355 Corona vulnerability confirmed to Russian Deputy PM SECVPF

சீனாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கும் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று முதலில் தோன்றிய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹானுக்கு அருகிலுள்ள ஜிங்ஜோ நகரத்தைச் சேர்ந்த 68 வயதான பெண்ணுக்கே மீண்டும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி இரண்டாவது முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பெப்ரவரி 8 ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதே மாதத்தின் பிற்பகுதியில் இந்த நோயிலிருந்து குணமடைந்தார் என்று ஜிங்ஜோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொரோனா நோயாளியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொற்று நோய் தாக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் இதுவும் ஒன்றாகும்.