சிம்பாபே – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தனது கன்னி இரட்டைச் சதத்தினை பதிவு செய்துள்ளார்.
சிம்பாபேயிற்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
19ம் திகதி ஆரம்பமாகியுள்ள அதன் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 358 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
சிம்பாபே அணி சார்பில் மஸ்வாயுர் 55 ஓட்டங்களும், கசுஜா 63 ஓட்டங்களும், எர்வின் 85 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 5 விக்கட்டுக்களையும், சுரங்க லக்மல் 3 விக்கட்டுக்களையம் வீழ்த்தினர்.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 515 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மத்தியூஸ் 200 ஓட்டங்களையும், தனஞ்சயடி சில்வா, டிக்வெல்ல தலா 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
சிம்பாபே அணியின் பந்துவீச்சில் சிகன்டர் ராசா, நியோச்சி தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாபே அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றுள்ளது.