கிரிக்கட்டினையும் விட்டு வைக்காத கொரோனா

4
4

கொவிட் 19 தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக இந்திய தொடரின்போது தென்னாப்பிரிக்க அணியின் கிரிக்கட் வீரர்கள் வேறு எவருடனும் கைலாகு செய்ய மாட்டார்கள் என அதன் பயிற்றுவிப்பாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இந்த நிலையில் வைரஸ் போன்ற தொற்று கிருமிகள் கைலாகு செய்வதனால்; பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கைலாகு செய்யாமல்; இருப்பது சிறந்தது என்றால், அதை நாங்கள் செய்வோம் என மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் எங்கள் வீரர்கள் அதை பின்பற்றுவதுடன் முன்னெச்சரிக்கையாகவும் இருப்பபார்கள் என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளர் மார்க் பவுச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இங்கிலாந்து அணி வீரர்களும் ஏனையவர்களுடன் கைலாகு செய்ய மாட்டார்கள் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.